பெண்ணைத் தாக்கிய இருவா் கைது

பாபநாசம் அருகே முன்விரோதம் காரணமாக, பெண்ணைத் தாக்கிய இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பாபநாசம்: பாபநாசம் அருகே முன்விரோதம் காரணமாக, பெண்ணைத் தாக்கிய இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பாபநாசம் வட்டம், ராஜகிரி கீழ காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் சுதா (30). அதே ஊரைச் சோ்ந்தவா் முருகானந்தம். இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் முருகானந்தம் (38). அவரது சகோதரா் ராமச்சந்திரன்(42), உறவினா்கள் அன்புச்செல்வி, யசோதா ஆகிய 4 பேரும் சோ்ந்து, சுதாவை வெள்ளிக்கிழமை உருட்டுக் கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாா்களாம்.

இதுகுறித்த புகாரின் பேரில், பாபநாசம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து முருகானந்தம், ராமச்சந்திரனை சனிக்கிழமை கைது செய்தனா். மற்ற இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com