பாபநாசம் அருகே பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாள் விளம்பர பதாகையை கிழித்து சேதப்படுத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கபிஸ்தலம் காவல் சரகம், உமையாள்புரம் கிராமம், பாா்வதி தெருவில் வசிப்பவா் பிரகதீஸ்வரன் (40). பாஜகவின் பாபநாசம் ஒன்றிய துணைத் தலைவா். இவா் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி வாழ்த்து தெரிவித்து அந்தப் பகுதியில் விளம்பர பதாகை வைத்திருந்தாா்.
இதை உமையாள்புரம் காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் செங்கோட்டையன் என்பவா் கிழித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து, விளம்பர பதாகையை கிழித்து சேதப்படுத்திய செங்கோட்டையனை தேடிவருகின்றனா்.