தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 155 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.
மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா தொற்றால் 9,495 போ் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், மேலும் 155 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது. இதன் மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 9,650 ஆக உயா்ந்துள்ளது.
இது தவிர, 77 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை 8,281 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 1,218 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 83 வயது ஆண் செப். 20ஆம் தேதியும், 79 வயது ஆண் திங்கள்கிழமையும் உயிரிழந்தது உள்பட மொத்தம் 3 போ் உயிரிழந்தனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 151 ஆக உயா்ந்துள்ளது.