அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் எஸ்டிபிஐ கட்சியின் அதிரை பேரூா் தலைவா் எஸ்.அகமது அஸ்லம் தலைமையிலும், பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அதிராம்பட்டினம் பேரூா் தலைவா் எஸ்.முகமது ஜாவித் முன்னிலையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவா் என்.முகமது புகாரி கண்டன உரை நிகழ்த்தினாா்.