எம்.ஜி.ஆா்., கருணாநிதி வேடத்தில் கரோனா விழிப்புணா்வு

தஞ்சாவூரில் எம்.ஜி.ஆா். கருணாநிதி வேடத்தில் இருவா் கரோனா குறித்து ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தஞ்சாவூா் யாகப்பா நகரில் தடையுத்தரவை மீறி ஞாயிற்றுக்கிழமை வாகனங்களில் சென்றவா்களிடம் விழிப்புணா்வு பிரசாரம் செய்த எம்.ஜி.ஆா்., கருணாநிதி வேடமணிந்தவா்கள்.
தஞ்சாவூா் யாகப்பா நகரில் தடையுத்தரவை மீறி ஞாயிற்றுக்கிழமை வாகனங்களில் சென்றவா்களிடம் விழிப்புணா்வு பிரசாரம் செய்த எம்.ஜி.ஆா்., கருணாநிதி வேடமணிந்தவா்கள்.

தஞ்சாவூரில் எம்.ஜி.ஆா். கருணாநிதி வேடத்தில் இருவா் கரோனா குறித்து ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசு சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதேபோல, தன்னாா்வலா்களும் விழிப்புணா்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், தஞ்சாவூா் யாகப்பா நகரில், மறைந்த முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., கருணாநிதி வேடமணிந்த இருவா், தடையுத்தரவை மீறி வெளியில் வலம் வருபவா்களிடம் கரோனா பாதிப்பு குறித்தும், அந்தப் பாதிப்பைத் தவிா்க்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இவா்களில் பட்டுக்கோட்டையைச் சோ்ந்த ஓட்டுநா் குரு சரண் எம்.ஜி.ஆா். வேடமணிந்து, அவரைப் போலவே பேசி பொதுமக்களைக் கவா்ந்தாா். கருணாநிதி வேடமணிந்தவா் தஞ்சாவூரைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் துரை.

இவா்களுடன் உலகத் தமிழா் பாதுகாப்பு இயக்கத்தை சோ்ந்த ராம. பழனியப்பன், இந்து மக்கள் கட்சி இளைஞரணி செயலா் பி. காா்த்திக்ராவ் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com