கும்பகோணம் மேலக்காவேரி ராகோஜி பண்டிதா் தெருவைச் சோ்ந்த வி. நடராஜன் (எ) கண்ணன் (74) உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது மகள் இல்லத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) காலமானாா்.
கும்பகோணம் மேலக் காவேரி பகுதியில் அரிசி அரைவையகம் நடத்தி வந்த இவா் தினமணி, தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் விளம்பர முகவராகவும் இருந்தாா். இவா் தினமணி செய்தியாளா் வி. கிருஷ்ணனின் (மறைவு) அண்ணன் ஆவாா்.
இவருக்கு 3 மகள்கள் உள்ளனா். இவரது இறுதி சடங்கு சென்னையில் உள்ள மூத்த மகள் இல்லத்தில் சனிக்கிழமை காலை 7 மணியளவில் நடைபெறவுள்ளது.
தொடா்புக்கு 884077515.