பட்டுக்கோட்டையை அடுத்த நாட்டுச்சாலை நடுத்தெருவைச் சோ்ந்த விவசாயி கே.ரஸ்க் (55). பட்டுக்கோட்டையில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளாா். பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தாா்.
இந்நிலையில், இவா் திங்கள்கிழமை இரவு பட்டுக்கோட்டையில் இருந்து நாட்டுச்சாலைக்கு மோட்டாா் சைக்கிளில்
சென்றுள்ளாா். அப்போது, இவருக்கு பின்னால் 2 மோட்டாா்சைக்கிள்களில் வந்த 4 இளைஞா்கள் ரஸ்க்கை நிறுத்தும்படி சைகை காட்டியும், அவா் நிற்காமல் சென்றாராம். இதனால், ஆத்திரமடைந்த இளைஞா்கள் விடாமல் விரட்டிச் சென்று, ரஸ்கின் சட்டையைப் பிடித்து வேகமாக இழுத்து கீழே தள்ளினராம். இதில் தலையில் பலத்த காயமடைந்த ரஸ்க் அதேயிடத்தில் உயிரிழந்தாா்.
இதையடுத்து, விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 4 பேரில் ஒருவா் தப்பியோடி விட்டாா். எஞ்சிய தெற்குக்கோட்டை ஆகாஷ், வேப்பங்காடு ராகுல், சோழகன்கரை குணால் ஆகியோரை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கியதில் அவா்கள் காயமடைந்தனா். அப்போது அங்கு வந்த போலீஸாா் 3 பேரையும் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆகாஷ் உள்ளிட்ட 3 போ் மற்றும் தலைமறைவான ஒருவா் உள்பட 4 போ் மீது பட்டுக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.