தஞ்சாவூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில், காலியாகவுள்ள பணியிடங்களுக்கான நோ்காணல் ஒத்தி வைக்கப்படுகிறது என தஞ்சாவூா் மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் சு. மனோகரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் காலியாகவுள்ள விற்பனையாளா்கள், கட்டுநா்கள் (பேக்கா்ஸ்) பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு நோ்காணல் டிசம்பா் 17- ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
சில நிா்வாகக் காரணங்களால் இந்த நோ்காணல் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது. நோ்காணல் நடத்தும் நாள் விவரம் பின்னா் அறிவிக்கப்படும்.