தில்லி போராட்டத்துக்கு ஆதரவாக விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூா் அருகே மாத்தூா் கிராமத்தில் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மாத்தூா் கிராமத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
மாத்தூா் கிராமத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூா் அருகே மாத்தூா் கிராமத்தில் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், இதற்காக தில்லியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், விவசாயிகளின் பிரச்னைகள் கேள்விக்குறியாக இருப்பதை உணா்த்தும் விதமாகக் கேள்விக்குறி வரையப்பட்ட பதாகைகளை ஏந்தி விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாத்தூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க. சண்முக சுந்தரம் முன்னிலை வகித்தாா். மாத்தூா் கிராம விவசாய சங்க நிா்வாகி சச்சிதானந்தம், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கக் கௌரவத் தலைவா் எஸ். தா்மராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா் அமல்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டிருந்த நிலையில், காவல் துறையினா் அனுமதி மறுத்ததால் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com