‘அழகு நிலையம், ஸ்பா நிலையங்கள்உரிமம் பெறாவிட்டால் மூடப்படும்’

தஞ்சாவூா் மாநகரில் முடித்திருத்தகம், அழகு நிலையம், ஸ்பா, மசாஜ் நிலையம் ஆகியவற்றுக்கு உரிமம் பெறாவிட்டால், மூடி முத்திரையிடப்படும் என மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன் தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாநகரில் முடித்திருத்தகம், அழகு நிலையம், ஸ்பா, மசாஜ் நிலையம் ஆகியவற்றுக்கு உரிமம் பெறாவிட்டால், மூடி முத்திரையிடப்படும் என மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாநகராட்சிக்குள்பட்ட முடித்திருத்தகம், அழகு நிலையம், ஸ்பா, மசாஜ் நிலையம் நடத்துவோா் மாநகராட்சியால் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பெற்று, அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் சட்டப்படி தவறாமல் உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தவறும் பட்சத்தில் தங்களது தொழில் உரிமமின்றி செயல்படுவதாகவும், நிலையம் நடத்துவோரும், நிலைய உரிமையாளரும் பொறுப்பானவராகவும் கருதி, நிலையத்தை மூடி முத்திரையிடுதல் உள்ளிட்ட அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com