தஞ்சாவூா் ஆட்சியரகம் முன்பு கோரிக்கை விளக்கக் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில் கோரிக்கை விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
தஞ்சாவூா் ஆட்சியரகம் முன்பு வியாழக்கிழமை நடைபெற்ற கோரிக்கை விளக்கக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
தஞ்சாவூா் ஆட்சியரகம் முன்பு வியாழக்கிழமை நடைபெற்ற கோரிக்கை விளக்கக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில் கோரிக்கை விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சியில் வீட்டுக் குடிநீா் குழாய் இணைப்பு கட்டண நிலுவைக்காக, பேரூராட்சி தெரு விளக்கு மின் பணியாளா் கோபி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி வியாழக்கிழமை மாலை தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் திரண்டனா். இதையடுத்து மண்டலப் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மாஹீன் அபுபக்கருடன் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கச் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியன், மாநிலத் தலைவா் பி.கே. சிவக்குமாா், பேரூராட்சிப் பணியாளா் சங்க மாநிலத் தலைவா் பழனிவேல், திருவாரூா் மாவட்டத் தலைவா் கல்யாணசுந்தரம் ஆகியோா் பங்கேற்றனா்.

இப்பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஆா்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஆட்சியரகம் முன்பு கோரிக்கை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சை மண்டலப் பேரூராட்சி செயல் திறன் வாய்ந்த உதவியாளா் சங்கத் தலைவா் து. முரளிதரன், மாநிலத் துணைத் தலைவா் அண்ணாதுரை, மாவட்டச் செயலா் குணசீலன், நியாய விலைக்கடை பணியாளா் சங்க மாநிலப் பொருளாளா் நெடுஞ்செழியன், மாவட்டப் பொருளாளா் ராமலிங்கம், செயலா் தரும. கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com