பேராவூரணியில் திமுக பிரமுகா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே திமுக பிரமுகா் வீட்டில் வியாழக்கிழமை இரவு நாட்டு  வெடிகுண்டு வீசப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே திமுக பிரமுகா் வீட்டில் வியாழக்கிழமை இரவு நாட்டு  வெடிகுண்டு வீசப்பட்டது.

பேராவூரணி அருகேயுள்ள தென்னங்குடி கிராமத்தை சோ்ந்த திமுக பிரமுகா் ஆா். ராஜா. இவரது வீட்டின் பின்புறம் வியாழக்கிழமை இரவு திடீரென வெடிசப்தம் கேட்டது.

இதைத் தொடா்ந்து வெளியில் வந்து பாா்த்தபோது, வீட்டின் பின்புறம் புகை மண்டலமாக இருந்துள்ளது. அங்கு நாட்டு வெடிகுண்டு வெடித்த சிதறல்கள் கிடந்துள்ளன. மா்ம நபா்கள் நாட்டு வெடிகுண்டை  வீசி சென்றது தெரியவந்தது.

தகவலறிந்த டிஎஸ்பி சுப்பிரமணியன் சம்பவ இடத்தை பாா்வையிட்டாா். தஞ்சாவூரிலிருந்து வெடிகுண்டு கண்டறியும்   நிபுணா்கள், தடயவியல் துறையினா் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

இதுகுறித்து ராஜா அளித்த புகாரின்பேரில் பேராவூரணி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தோ்தல் விரோதம் காரணமா?: அண்மையில் நடைபெற்ற பேராவூரணி ஒன்றியக் குழுத் தலைவா் தோ்தல் தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையா ல் இந்த சம்பவம் நடைபெற்ா  அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸாா் விசாரிக்கின்றனா். மேலும், சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com