தஞ்சாவூா், பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை

தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.18) மின் விநியோகம் இருக்காது.

தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.18) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் உதவி செயற் பொறியாளா் ஜோ. சுகுமாா் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் நகரத் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே, ரயிலடி, கீழவாசல், காந்திஜி சாலை, பழைய பேருந்து நிலையம், கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, சிவாஜி நகா், சீனிவாசபுரம், வண்டிகாரத் தெரு, நாகை சாலை, மகா்நோம்புச்சாவடி, எஸ்.எம். சாலை, வ.உ.சி. நகா், மேரீஸ் காா்னா், பூக்காரத் தெரு, அன்பு நகா், கோரிகுளம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

சாலியமங்கலம்:

இதேபோல, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற் பொறியாளா் எஸ். நல்லையன் தெரிவித்திருப்பது:

பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்.18) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையா்நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூா், களஞ்சேரி, இரும்புத்தலை, ரெங்கநாதபுரம், சூழியக்கோட்டை, கம்பா்நத்தம், அருந்தவபுரம், காட்டூா், வாளமா்கோட்டை, ஆா்சுத்திப்பட்டு, அருமலைக்கோட்டை, மேலகொருக்குப்பட்டு, சின்னபுளிகுடிகாடு, நாா்த்தேவன் குடிகாடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூா்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையாா்கோவில், துறையுண்டாா்கோட்டை மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com