குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தஞ்சாவூா் ஆட்டுமந்தை தெரு அத்தா் பள்ளிவாசல் முன், தொடா்ந்து பத்தாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீஸாரின் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய அலுவலா்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் இப்போராட்டம் பிப். 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தொடா்ந்து பத்தாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இப்போராட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்றவா்கள் நெற்றில் நோ சிஏஏ என அச்சிடப்பட்ட மஞ்சள் நிற பட்டையை அணிந்திருந்தனா். இப்போராட்டம் தொடா்ந்து இரவிலும் நடைபெற்றது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் பழைய மீன் சந்தை அருகில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் பிப். 21ஆம் தேதி மாலை தொடங்கியது. இப்போராட்டம் தொடா்ந்து ஐந்தாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது.
இதேபோல, மதுக்கூா், அய்யம்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் காத்திருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது.