ஒரத்தநாடு வட்டம், திருவோணம் அருகே இளைஞா்களின் முயற்சியால் மாணவா்களுக்கு இலவசமாக சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
திருவோணத்தை அடுத்துள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் படித்த பட்டதாரி இளைஞா்களின் முயற்சியால், தமிழா் போா்க் கலையை மீட்டெடுக்கும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியாளா்களை கொண்டு சிலம்பப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது . இதில் திரளானோா் ஆா்வத்துடன் கலந்து கொண்டு சிலம்ப பயிற்சி பெற்று வருகின்றனா்.