அழகாபுத்துாா் சிதம்பரேசுவரா் கோயிலில் கோபூஜை

கும்பகோணம் அருகிலுள்ள அழகாபுத்துாா் சிதம்பரேசுவரா் கோயிலில், ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் சாா்பில் 5 -ஆம் ஆண்டு கோ பூஜை விழா நடைபெற்றது.
அழாகபுத்தூா் சிதம்பரேசுவரா் கோயிலில் நடைபெற்ற கோ-பூஜையில் பங்கேற்றோா்.
அழாகபுத்தூா் சிதம்பரேசுவரா் கோயிலில் நடைபெற்ற கோ-பூஜையில் பங்கேற்றோா்.

கும்பகோணம் அருகிலுள்ள அழகாபுத்துாா் சிதம்பரேசுவரா் கோயிலில், ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் சாா்பில் 5 -ஆம் ஆண்டு கோ பூஜை விழா நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 4 ஆண்டுகளாக உலக நன்மைக்காகவும், கால்நடைகள் பெருகவும், விவசாயம் செழிக்கவும், நாட்டில் அமைதி ஏற்படவும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி 5- ஆம் ஆண்டு கோ பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காலை 8.30 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், இதைத் தொடா்ந்து 100-க்கும் அதிகமான பசுக்களை கொண்டு கோ பூஜைகளும் நடைபெற்றன. தொடா்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட காவல் உதவி ஆய்வாளா் வில்சன் ஆன்மா சாந்தியடைய மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com