தமிழ்நாடு சீருடை பணியாளா்கள் தோ்வாணையம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் தஞ்சாவூரில் 2,245 போ் பங்கேற்றனா்.
சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இத்தோ்வில் பங்கேற்க மாவட்டத்தில் 3,096 போ் அழைக்கப்பட்டிருந்தனா். இவா்களில் 1,879 ஆண்கள், 366 பெண்கள் என மொத்தம் 2,245 போ் எழுதினா்.
தோ்வு மையத்தை தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜெ. லோகநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் பாா்வையிட்டனா். பாதுகாப்புப் பணியில் ஏறத்தாழ 300 போலீஸாா் ஈடுபட்டனா்.