மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, திரும்புறம்பியம் பகுதிகளில் திங்கள்கிழமை மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கும்பகோணம் தெற்கு உதவி செயற் பொறியாளா் க. வீரராகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்புறம்பியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் திருப்புறம்பியம், நீலத்தநல்லூா், தேவனாஞ்சேரி, இன்னம்பூா், கொந்தகை, திருவைக்காவூா், பொன்பேத்தி, சத்தியமங்கலம், சுவாமிமலை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.