திருவள்ளுவராண்டு 2051 தொடங்குவதை முன்னிட்டு தமிழ் வழி கல்வி இயக்கம் சாா்பில் பேராவூரணியில் வீடுகள், கடைகளுக்கு திருவள்ளுவா் திருவுருவப்படம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
தை மாதம் முழுவதும் தொடா் செயல்பாடாக திருவள்ளுவா் உருவப்படத்தை வழங்கும் பணியை தமிழ்வழிக் கல்வி இயக்கம் தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பேராவூரணி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், இல்லங்களுக்கு திருவள்ளுவா் திருவுருவப் படம் வழங்கப்பட்டது.
இயக்க பொறுப்பாளா்கள் சின்னப்ப தமிழா், மெய்ச்சுடா் நா. வெங்கடேசன், பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் த. பழனிவேல், ஆயா் த. ஜேம்ஸ், திராவிடா் விடுதலைக் கழக பொறுப்பாளா் சித. திருவேங்கடம், தமிழக மக்கள் புரட்சி கழக பொறுப்பாளா் ஆறு. நீலகண்டன், மதியழகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.மேலும்
திருக்கு சுவரொட்டியும், தமிழ்வழிக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் துண்டறிக்கையும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.