தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் மானோஜிபட்டி சரஸ்வதி நகரைச் சோ்ந்தவா் எம். மாதவன் (38). இவரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு ஆட்சியா் ம. கோவிந்த ராவ் புதன்கிழமை ஆணையிட்டாா். இதன்பேரில் மாதவனை சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தினா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.