ஊடகவியலாளா்களை அச்சுறுத்தும் பாஜகவினரை கண்டித்து தஞ்சாவூா் ரயிலடியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினா் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடா் முன்னேற்றக் கழகத்தினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த தமிழ்நாடு ஆதிதிராவிடா் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனா் - தலைவா் சதா. சிவக்குமாா் கண்டன முழக்கங்களை எழுப்பினாா்.
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநிலத் துணைப் பொதுச் செயலா் சபி. அகமது, மாவட்டச் செயலா் ஷேக் முஹம்மது, மாவட்டத் துணைச் செயலா் பிரபு, தமிழ்நாடு ஆதிதிராவிடா் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலா் பொய்கை சின்னராஜா, பொறியாளா் அணி செல்வக்குமாா், தஞ்சை மாநகரச் செயலா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.