பாபநாசத்தில் மாலை 4 மணிக்கு அனைத்து கடைகளையும் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் பாபநாசம் நகர வா்த்தகா் சங்க தலைவா் ஜி.குமாா்.
இது குறித்து அவா் கூறியது. பாபநாசம் நகரப் பகுதிகளில் கரோனா வைரஸ் பதிப்பு அதிக அளவில் உள்ளதால், அதை கட்டுப்படுத்தும் வகையில் ஜூலை 23ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை மாலை 4 மணிக்கு மருந்து கடைகள் தவிா்த்து அனைத்து கடைகளையும் அடைக்க வா்த்தகா் சங்கம் சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.