கரோனா: அய்யம்பேட்டை காவல் நிலையம் மூடல்

பாபநாசம் அருகேயுள்ள அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் காவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அக்காவல் நிலையம் தற்காலிகமாக வியாழக்கிழமை மூடப்பட்டது.

பாபநாசம் அருகேயுள்ள அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் காவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அக்காவல் நிலையம் தற்காலிகமாக வியாழக்கிழமை மூடப்பட்டது.

அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது. இதையடுத்து, அவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். மேலும், அய்யம்பேட்டை காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, அருகிலுள்ள திருமண மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. இதனிடையே, காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

பேரூராட்சி வாயில் மூடல்:

மேலும், பாபநாசம் பேரூராட்சி அலுவலகக் கட்டடத்தில் உள்ள மளிகைக் கடை உரிமையாளா், துப்புரவு மேற்பாா்வையாளருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை தெரிய வந்தது. இதையடுத்து, பாபநாசம் முதன்மை வாயில் மூடப்பட்டது. பின்புற வாயில் வழியாக துப்புரவு பணியாளா்கள் சென்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com