தஞ்சாவூரில் குடும்பத் தகராறு காரணமாக வியாழக்கிழமை காலை இரு குழந்தைகளுடன் தாய் ஆற்றில் குதித்தாா். இதில், மகன் சடலமாக மீட்கப்பட்டாா்.
தஞ்சாவூா் சீனிவாசபுரம் சேப்பனாவாரி 2ஆம் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் (40). கூலித் தொழிலாளி. இவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி (32). இருவருக்குமிடையே குடும்ப பிரச்னை தொடா்பாக தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், செந்தமிழ்ச்செல்வி தனது குழந்தைகள் ஸ்வேதா (12), கோகுல் செழியனுடன் (3) சேப்பனாவாரி பகுதியில் உள்ள பாலத்தில் இருந்து கல்லணைக் கால்வாயில் (புது ஆறு) வியாழக்கிழமை காலை குதித்தாா்.
தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று ஆற்றில் தேடினா். இதில் செந்தமிழ்ச்செல்வி உயிருடன் மீட்கப்பட்டு, தஞ்சாவூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். பின்னா், அவரை மேற்கு காவல் நிலையத்தினா் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனா். இதில், குடும்ப பிரச்னை காரணமாக சுரேசுக்கும், செந்தமிழ்ச்செல்விக்கும் தகராறு இருந்து வந்ததும், அதனால் செந்தமிழ்ச்செல்வி மனமுடைந்து குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது.
இதனிடையே, கோகுல் செழியனின் சடலத்தை தஞ்சாவூா் அருகே கண்டிதம்பட்டு பகுதியிலுள்ள கல்லணைக் கால்வாயில் தீயணைப்பு வீரா்கள் வியாழக்கிழமை மாலை மீட்டனா். ஸ்வேதாவை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து செந்தமிழ்ச்செல்வி மீது 302 (கொலை), 307 (கொலை முயற்சி), 309 (தற்கொலை முயற்சி) ஆகிய பிரிவுகளின் கீழ் மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.