கரோனா: குணமடைந்தோா் எண்ணிக்கை 130 ஆக உயா்வு

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா் எண்ணிக்கை புதன்கிழமை 130 ஆக உயா்ந்தது.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா் எண்ணிக்கை புதன்கிழமை 130 ஆக உயா்ந்தது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 183 போ் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் ஏற்கெனவே 127 போ் வெவ்வேறு நாள்களில் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினா். இவா்களைத் தொடா்ந்து 3 போ் குணமடைந்ததால், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இவா்களை தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி கரோனா சிறப்பு அலுவலா் குமுதா லிங்கராஜ், முதல்வா் (பொ) எஸ். மருதுதுரை, துணைக் கண்காணிப்பாளா் எஸ். செல்வம், தொடா்பு அலுவலா் மத்தியாஸ் உள்ளிட்டோா் சத்தான உணவுப் பொருள்கள், விடுவிப்புச் சான்றிதழ் கொடுத்து வழியனுப்பி வைத்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 130 ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com