தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கரோனா குறித்த விழிப்புணா்வு முகாம் மாா்ச் 10ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 12ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில், பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கு. சின்னப்பன், சித்த மருத்துவத் துறை உதவிப் பேராசிரியா் பெ. பாரதஜோதி உள்ளிட்டோா் பேசினா். இந்த முகாமில் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.