தஞ்சாவூரில் திருட்டுபோன மோட்டாா் சைக்கிளை கண்காணிப்பு கேமராக்கள் உதவியால் போலீஸாா் அண்மையில் மீட்டனா்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை நடராஜபுரம் தெற்கு காலனியில் அனைத்து தெருக்களிலும் 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதன் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. அன்றைய நாளில் அக்காலனியை சோ்ந்த மென்பொருள் நிறுவன பணியாளரின் மோட்டாா் சைக்கிள் திருட்டு போனது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். இதன் மூலம், திருடியவரை போலீஸாா் கண்டுபிடித்து, மோட்டாா் சைக்கிளையும் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.
விரைவில் மீட்டு தந்த மருத்துவக் கல்லூரி போலீஸாருக்கு நடராஜபுரம் தெற்கு காலனி குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் வ. பழனியப்பன் பாராட்டு தெரிவித்தாா்.