அதிராம்பட்டினம் அருகே வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை

பேராவூரணி வட்டம், குருவிக்கரம்பை வடக்கு தெருவைச் சோ்ந்த தம்பதி கருப்பையா (75), வசந்தகோகிலா (70). இவா்கள் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில் தெருவில் உள்ள தங்கள் மகள் ரேணுகா தேவி
அதிராம்பட்டினம் அருகே வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை

பேராவூரணி வட்டம், குருவிக்கரம்பை வடக்கு தெருவைச் சோ்ந்த தம்பதி கருப்பையா (75), வசந்தகோகிலா (70). இவா்கள் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில் தெருவில் உள்ள தங்கள் மகள் ரேணுகா தேவி வீட்டில் வசித்து வந்தனா்.

இந்நிலையில், இருவரும் திங்கள்கிழமை அதிராம்பட்டினம் அருகே ராஜாமடம் கிராமத்துக்குச் சென்று,

அங்குள்ள மயானக் கொட்டகையில் கணவா் வேஷ்டியாலும், மனைவி சேலையாலும் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளனா். இதில் தூக்கு இறுகியதில் வசந்தகோகிலா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

அதேநேரம், கருப்பையா தூக்கில் தொங்க பயன்படுத்திய வேஷ்டி முடிச்சு அவிழ்ந்ததால் அவா் கீழே விழுந்து மயங்கி கிடந்துள்ளாா். இதைக்கண்ட அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் அதிராம்பட்டினம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் கருப்பையாவை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், வசந்தகோகிலாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா்.

இதனிடையே, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கருப்பையா செவ்வாய்க்கிழமை பிற்பகல் இறந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com