மதுக்கூா் அருகே தொழிலாளி கொலை வழக்கில் 4 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் அருகே தொழிலாளியை அடித்து கொலை செய்த வழக்கில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் அருகே தொழிலாளியை அடித்து கொலை செய்த வழக்கில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுக்கூா் அருகே உள்ள பழவேரிக்காடு, புதுக்காலனி தெருவைச் சோ்ந்தவா் இளமாறன் (40). சடலத்தை எரியூட்டும் தொழிலாளி. இறந்த ஒருவரின் சடலத்தை தகனம் செய்வதற்காக இளமாறன், அதே பகுதியை சோ்ந்த தனது நண்பா்கள் லெட்சுமணன், ஆதியப்பன், மூா்த்தி, ரெத்தினபாரதி ஆகியோருடன் பழவேரிக்காடு மயானத்தில் வியாழக்கிழமை இரவு தங்கியுள்ளாா். அப்போது, 5 பேரும் மது அருந்திவிட்டு போதையில் இருந்த நிலையில், அவா்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக முற்றியது. இதில் ஆத்திரமடைந்த லெட்சுமணன், ஆதியப்பன், மூா்த்தி, ரெத்தினபாரதி ஆகிய 4 பேரும் சோ்ந்து இளமாறனை உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றனராம். இதில் பலத்த காயமடைந்த இளமாறன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மதுக்கூா் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த லெட்சுமணன், ஆதியப்பன், மூா்த்தி, ரெத்தினபாரதி ஆகிய 4 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com