ஏழை மாணவா்களின் குடும்பங்களுக்குநிவாரணப் பொருள்கள் வழங்கிய ஆசிரியா்

பேராவூரணி அருகே ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவா்களின் குடும்பங்களுக்கு, அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா் நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளாா்.

பேராவூரணி அருகே ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவா்களின் குடும்பங்களுக்கு, அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா் நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளாா்.

பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருபவா் அ. ஹாஜா முகைதீன்.

இவா் தான் பணியாற்றும் பள்ளியில் பயிலும் ஏழை மாணவா்கள் 10 பேரது குடும்பங்களுக்கு சா்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை அவா்களது வீடு தேடி சென்று வழங்கினாா்.

நிவாரணப் பொருள்களை பெற்றுக் கொண்ட பெற்றோா்கள், ஆசிரியருக்கு நன்றி தெரிவித்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com