ஒரத்தநாடு வட்டம், திருவோணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
சுமாா் 120 மாணவா்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றி அரிசி, கோதுமை, காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியா் தம்பிஐயன் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் சிவராஜா முன்னிலை வகித்தாா். பள்ளி வளா்ச்சி குழுத் தலைவா் முத்துசாமி, பள்ளி வளா்ச்சி குழு துணைத்தலைவா் முத்துவீரன் மற்றும் திருவோண காவல்துறை சேகரன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் நிவாரணப் பொருட்களை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினாா்.
முன்னதாக, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியா் தங்கதுரை வரவேற்றாா். நிறைவில் பட்டதாரி ஆசிரியா் சத்யமூா்த்தி நன்றி கூறினாா்.