அம்மாபேட்டை ஒன்றியக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் கே.வீ. கலைச்செல்வன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் தங்கமணி சுரேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் அண்மையில் மறைந்த முன்னாள் வேளாண் அமைச்சா் இரா. துரைக்கண்ணு, 16-ஆவது வாா்டு மாவட்டக் குழு உறுப்பினா் அம்பிகா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (தணிக்கை) அமுதா உள்ளிட்டோா் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து ஊராட்சிகளிலும் ஜல்ஜீவன் திட்டப் பணிகள் தொடங்குவது என்பனஉள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, ஒன்றிய ஆணையா் து. ரகுநாதன் வரவேற்றாா். நிறைவில் வட்டார வளா்ச்சி அலுவலா்(கிராம ஊராட்சிகள்) கே.முருகன் நன்றி கூறினாா்.