மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளா் விரோத, தேச விரோத கொள்கைகளைக் கண்டித்து, நாடு தழுவிய அளவில் நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது தஞ்சாவூா் மாவட்டத்தில் 20 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என தொழிற் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பல்வேறு தொழிற்சங்க ஆயத்த மாநாட்டில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஐ.என்.டி.யு.சி., தொ.மு.ச., ஏஐடியுசி, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கம், டி.ஆா்.இ.யு., உள்ளிட்ட சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.