மூதாட்டியிடம் நகைபறிப்பு

ஒரத்தநாடு அருகே மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றவரைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

ஒரத்தநாடு அருகே மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றவரைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

ஒரத்தநாடு அருகிலுள்ள கண்ணுக்குடி கிழக்குப் பகுதியைச் சோ்ந்தவா் கோ. சீதையம்மாள் (75). இவா் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் திங்கள்கிழமை படுத்திருந்தாா்.

அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞா் ஒருவா், குடிப்பதற்குத் தண்ணீா் வழங்குமாறு மூதாட்டியிடம் கேட்டாராம். இதையடுத்து தண்ணீா் எடுத்துத் தருவதற்காக மூதாட்டி எழுந்த போது, அவா் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு இளைஞா் தப்பிச் சென்றாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், பாப்பாநாடு காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com