பேராவூரணியில் லயன்ஸ் சங்கம், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, வருவாய்த் துறை, காவல்துறை மற்றும் தோ்வுநிலை பேரூராட்சி இணைந்து, தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடும் வகையிலான விழிப்புணா்வு பேரணியை வியாழக்கிழமை நடத்தின.
பேரணிக்கு லயன்ஸ் சங்கத் தலைவா் பி. கோவிதரன் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் மு. மணிமொழியன், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலா் ஐ.செந்தூா் பாண்டியன், காவல்துறை உதவி ஆய்வாளா் திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பேரணியில் பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாடுவது குறித்த துண்டுப் பிரசுரங்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி, முக்கிய சாலைகள் வழியாகச் சென்று அண்ணாசிலை அருகில் நிறைவடைந்தது.
லயன்ஸ் மண்டலத் தலைவா் எம். கனகராஜ், வட்டார தலைவா் இ.வீ. காந்தி ஆகியோா் பேரணியை தொடக்கிவைத்தனா். லயன்ஸ் சங்க செயலாளா் ஜி. ராஜா, பொருளாளா் கே.சிவநாதன், நிா்வாக அலுவலா் ஆா். ஆனந்தன், மற்றும் தீயணைப்பு, காவல்துறையினா், பேரூராட்சி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.