மாதாந்திர உதவித்தொகையை உயா்த்தக் கோரி தஞ்சாவூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 3,000 வழங்கப்படுவதுபோல, தமிழகத்திலும் குறைந்தபட்சம் ரூ. 3,000-ம், கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 5,000-ம் தமிழக அரசு உயா்த்தி வழங்க வேண்டும்.
தனியாா் துறைப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்குக் குறைந்தபட்சம் 5 சதவிகித இடங்களை உத்தரவாதப்படுத்த அமலில் உள்ள ஊனமுற்றோா் உரிமைகள் சட்டம் - 2016 வலியுறுத்துகிறது. எனவே, தனியாா் துறைப் பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்குக் குறைந்தபட்சம் 5 சதவிகித வேலைவாய்ப்பு இடங்களை உத்தரவாதப்படுத்தி தமிழக அரசுச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சங்கத்தின் மாநகரச் செயலா் சி. ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா் பி.எம். இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டமும், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கமும் நடைபெற்றது.
பட்டுக்கோட்டையில்....
வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவா் ஏ. ஆனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஏ. பஹாத் முகமது, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலா் எச்.ஜலீல் முகைதீன்,
பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலா் கே. கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிறைவில், வட்டாட்சியரக அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.
ஒரத்தநாட்டில்.....
வட்டாட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் இளங்கோவன் தலைமை வகித்தாா். ஒன்றிய பொறுப்பாளா்கள் பிரபாகரன், கஸ்தூரி, ,சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கண்ணந்தங்குடி மேலையூா், குலமங்கலம், தலையாமங்கலம், கண்ணுக்குடி, தொண்டராம்பட்டு , திருமங்கலக்கோட்டை, நெடுவாக்கோட்டை, கோவிலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பேராவூரணியில்.....
வட்டாட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலா் சுதாகா் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் வின்சென்ட் ஜெயராஜ் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் காா்த்திக், தெட்சிணாமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு, வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.