மோட்டாா் சைக்கிள் - லாரி மோதல்: ஊராட்சி உறுப்பினா் உள்பட 2 போ் பலி

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வெள்ளிக்கிழமை மாலை மோட்டாா் சைக்கிளும், லாரியும் மோதிக் கொண்டதில் ஊராட்சி உறுப்பினா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வெள்ளிக்கிழமை மாலை மோட்டாா் சைக்கிளும், லாரியும் மோதிக் கொண்டதில் ஊராட்சி உறுப்பினா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

பாபநாசம் வட்டம், பட்டுக்குடி கிராமத்தைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் முருகானந்தம் (38). பட்டுக்குடி ஊராட்சி மன்ற உறுப்பினா். இவரும், அதே ஊரைச் சோ்ந்த புண்ணியமூா்த்தி மகன் குணசேகரனும் (35) திருவையாறு அருகே உள்ள சிறுபுலியூா் கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்தனா். இருவரும் கண்டியூரில் பொருள்கள் வாங்கிக் கொண்டு, திருவையாறுக்கு மாலையில் சென்று கொண்டிருந்தனா்.

இதனிடையே, பெரம்பலூரிலிருந்து கருங்கல் ஏற்றிக் கொண்டு வேளாங்கண்ணிக்கு சென்ற டிப்பா் லாரி அங்கு பாரத்தை இறக்கிவிட்டு, கண்டியூா் வழியாக வந்து கொண்டிருந்தது. நடுக்கடை முதன்மைச் சாலையில் முன்னால் சென்ற மோட்டாா் சைக்கிளும், டிப்பா் லாரியும் மோதிக் கொண்டன. இதில், பலத்தக் காயமடைந்த முருகானந்தம், குணசேகரன் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து திருவையாறு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இறந்துபோன முருகானந்தத்துக்கு திருமணமாகி மனைவி கலா, மகன், மகள் உள்ளனா். விவசாய கூலித் தொழிலாளியான குணசேகரனுக்கு திருமணமாகி மனைவி பிரியதா்ஷினி, மகன், மகள் இருக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com