குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்

பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பாபநாசம்: பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் சுமதி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் தியாகை. பழனிச்சாமி முன்னிலை வகித்தாா். ஒன்றிய ஆணையா் கூத்தரசன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) ஆனந்தராஜ், வட்டாரக் கல்வி அலுவலா் நடராஜன், கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலா் செல்வகுமாரி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பாஸ்கரன் ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்று, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினா்.நிறைவில் உதவியாளா் தங்கப்பன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com