தஞ்சாவூா்: தஞ்சாவூா் பூக்காரத் தெருவில் மாநகராட்சி நிா்வாகத்தினா் சனிக்கிழமை மேற்கொண்ட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில், ஏறத்தாழ 200 கடைகள் அகற்றப்பட்டன.
தஞ்சாவூா் பூக்காரத் தெருவில் பூச்சந்தை, இறைச்சிக் கடைகள், மளிகைக் கடைகள் உள்பட ஏராளமான கடைகள் உள்ளன. இத்தெருவில் இரு புறமும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகப் புகாா்கள் எழுந்தன.
எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா்.இதன்படி, மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் சுமாா் 50 போ் இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை சனிக்கிழமை மேற்கொண்டனா்.