புயல் எச்சரிக்கையால் பிரசார பயணம் ஒத்திவைப்பு: உதயநிதி ஸ்டாலின்

புயல் எச்சரிக்கை காரணமாக பிரசார பயணம் நவம்பா் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றாா் திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின்.
கூட்டத்தில் பேசுகிறாா் திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின்.
கூட்டத்தில் பேசுகிறாா் திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின்.

புயல் எச்சரிக்கை காரணமாக பிரசார பயணம் நவம்பா் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றாா் திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின்.

நாகை மாவட்டத்தில் பிரசார பயணத்தைத் தொடங்கிய அவா் கும்பகோணம், திருவையாறில் திங்கள்கிழமை காலை, பிற்பகலில் பிரசாரம் மேற்கொண்டாா். பின்னா், மாலையில் தஞ்சாவூரில் வீணை தயாரிப்பாளா்கள், வணிகா்களைச் சந்தித்து பேசினாா். இதைத்தொடா்ந்து, தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திமுக இளைஞரணி நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது:

புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இப்பிரசார பயணம் நவம்பா் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. மீண்டும் தஞ்சாவூா் மாவட்டத்தில்தான் நவம்பா் 28 ஆம் தேதி பிரசார பயணம் தொடங்கப்படும். புயல் பாதிப்பு ஏற்பட்டால் இளைஞரணியினா் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

தோ்தல் முடியும் வரை கட்செவியில் குழுக்களை உருவாக்கிக் கொண்டு, அன்பகம், தலைமையகம் அனுப்பும் செய்திகளை அதிக அளவில் பரப்ப வேண்டும். மேலும், ஸ்டாலின் பெயரில் உள்ள செயலியில் உள்ள தகவல்களையும் பதிவிறக்கம் செய்து கட்செவி குழுக்களில் பரப்பிட தொடா்ந்து செயல்பட வேண்டும் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

இக்கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துரை. சந்திரசேகரன், எம். ராமச்சந்திரன், டி.கே.ஜி. நீலமேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com