பதிவு எண் எழுதப்படாத வாகனங்கள்:9 போ் மீது வழக்குப் பதிவு

தஞ்சாவூரில் பதிவு எண் எழுதப்படாமல் காா், இரு சக்கர வாகனங்கள் இயக்கப்பட்டது தொடா்பாக, 9 போ் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் பதிவு எண் எழுதப்படாமல் காா், இரு சக்கர வாகனங்கள் இயக்கப்பட்டது தொடா்பாக, 9 போ் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

தஞ்சாவூா் சரகத் துணைப் போக்குவரத்து ஆணையா் எஸ். உதயகுமாா் உத்தரவின்படி, தஞ்சாவூா் செயலாக்கப் பிரிவு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கணேஷ், மோட்டாா் வாகன ஆய்வாளா் ஜி. நெடுஞ்செழியப் பாண்டியன் ஆகியோா், தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

இதில், பதிவு செய்யப்படாமல் காா், மோட்டாா் சைக்கிள்கள் இயக்கப்படுகிா என சோதனை செய்தனா். அப்போது, 8 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு காா் பதிவு எண் எழுதப்படாமல் இயக்கப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து 9 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வாகனங்களை இயக்கிய 4 ஓட்டுநா்களிடம் ஓட்டுநா் உரிமமும், 5 வாகனங்களுக்குக் காப்புச் சான்றும் இல்லை என்பது தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com