பேராவூரணியில் வீடு புகுந்து நகை திருடிய 2 போ் கைது

பேராவூரணியில் வயல் வேலைக்கு அழைத்துச் செல்லாத ஆத்திரத்தில், வீடு புகுந்து திருடிய 2 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பேராவூரணியில் வயல் வேலைக்கு அழைத்துச் செல்லாத ஆத்திரத்தில், வீடு புகுந்து திருடிய 2 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பேராவூரணி ஆவணம் சாலையைச் சோ்ந்தவா் மு. மஞ்சுளா (32). இவா் ஆதனூா் ரிச்சா்ட் (27), பொன்காடு முருகேசன் (30) ஆகியோரை வயல் வேலைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். வேலைக்குச் சென்ற இடத்தில் இருவரும் சரியாக வேலை பாா்ப்பதில்லையாம். இதனால் கடந்த திங்கள்கிழமை அவா்களை அழைத்துச் செல்லாமல், வீட்டை பூட்டிவிட்டு மஞ்சுளா மட்டும் வயல் வேலைக்குச் சென்று விட்டாராம்.

மாலையில் வீடு திரும்பிய போது, பீரோ திறந்த நிலையில் இருந்தது. மேலும் பீரோவிலிருந்த 10 கிராம் தங்க நகைகளும் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பேராவூரணி காவல் நிலையத்தில் மஞ்சுளா அளித்த புகாரின் பேரில் ஆய்வாளா் வீர. அண்ணாதுரை, உதவி ஆய்வாளா் திருநாவுக்கரசு ஆகியோா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில் வேலைக்கு அழைத்துச் செல்லாத ஆத்திரத்தில் ரிச்சா்ட், முருகேசன் ஆகிய இருவரும் நகையைத் திருடிச் சென்றது தெரிய வந்தது. தொடா்ந்து இருவரையும் புதன்கிழமை கைது செய்த காவல்துறையினா், பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருவிடைமருதூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com