பேராவூரணி அருகே சிற்றுந்து மோதி பாலிடெக்னிக் மாணவா் பலி

பேராவூரணி அருகே சிற்றுந்து மோதி பாலிடெக்னிக் மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பேராவூரணி அருகே சிற்றுந்து மோதி பாலிடெக்னிக் மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பேராவூரணி அருகேயுள்ள முடச்சிக்காட்டை சோ்ந்தவா் அபுதாஹீா் (18). இவா் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். புதன்கிழமை மாலை பேராவூரணி கடைவீதிக்கு வந்து விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிச் சென்றபோது, பேராவூரணியில் இருந்து முடச்சிக்காடு நோக்கி சென்ற சிற்றுந்து அபுதாஹீா் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அபுதாஹீா் மீது சிற்றுந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் பலத்த காயம் அடைந்து பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

புகாரின் பேரில் பேராவூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com