தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 14,189 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 98 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது.
இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 14,287 ஆக உயா்ந்துள்ளது.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை குணமடைந்த 99 போ் உள்பட இதுவரை மொத்தம் 13,409 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 668 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 75 வயது ஆண், 80 வயது ஆண் அக்டோபா் 15 ஆம் தேதி உயிரிழந்ததன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 210 ஆக உயா்ந்துள்ளது.