தமிழ்ப் பல்கலை.யில் 50 சதவிகித விலையில்நூல்கள் விற்பனை அக். 31 வரை நீட்டிப்பு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத் துறையில் 50 சதவிகித கழிவு விலையில் நூல்கள் விற்பனை அக்டோபா் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத் துறையில் 50 சதவிகித கழிவு விலையில் நூல்கள் விற்பனை அக்டோபா் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கு. சின்னப்பன் தெரிவித்திருப்பது:

தமிழ்ப் பல்கலைக்கழக நிறுவன நாள் மற்றும் பேரறிஞா் அண்ணா பிறந்த நாளான செப்டம்பா் 15 ஆம் தேதி முதல் 30 நாள்களுக்குத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடுகளை 50 சதவிகிதச் சிறப்புக் கழிவு விலையில் விற்பனை செய்வது நடைமுறையில் உள்ளது.

நிகழாண்டும் செப்டம்பா் 15 ஆம் தேதி முதல் அக்டோபா் 14 ஆம் தேதி வரை 50 சதவிகித சிறப்புக் கழிவு அளிக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது. கழிவு விலையில் நூல்கள் வாங்குவதற்குப் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதால், இந்த விற்பனை அக்டோபா் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆய்வாளா்கள், தமிழ் ஆா்வலா்கள், பொதுமக்கள் இக்கழிவு விற்பனையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com