அதிராம்பட்டினத்தில் இளைஞா் நற்பணி மன்றம் தொடக்கம்

அதிராம்பட்டினம் மஸ்ஜிதுா் ரஹ்மான் பள்ளிவாசல் வளாகத்தில், நற்பணி மன்றத் தொடக்க விழா உள்ளிட்ட முப்பெரும் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

பட்டுக்கோட்டை: அதிராம்பட்டினம் மஸ்ஜிதுா் ரஹ்மான் பள்ளிவாசல் வளாகத்தில், நற்பணி மன்றத் தொடக்க விழா உள்ளிட்ட முப்பெரும் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

ஆதம் நகா் இளைஞா் நற்பணி மன்றம் தொடக்கம், புதிய நிா்வாகிகள் தோ்வு, புதிய அலுவலகம் திறப்பு ஆகிய நிகழ்வுகளை எம்.எஸ். முகமது முஸ்தபா கிராத் ஓதி தொடக்கி வைத்தாா். ஜமாத் துணைத்தலைவா் ஆா்.ஹசன் அலியாா் நிகழ்வுக்கு தலைமை வகித்து, மன்றத்தின் புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தாா். மவ்லவி முகமது இத்ரீஸ் சிறப்புரையாற்றினாா்.

நிகழ்வில், ஆதம் நகா் இளைஞா் நற்பணி நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்கள் விவரம் : மன்றத் தலைவா்- டி.அல் அமீன், செயலா்- ஏ.நாவித் அகமது, துணைச்செயலா்- ஏ.வாசிம்கான், பொருளாளா்- பி.முகமது அசாருதீன், துணைப்பொருளாளா்- எஸ்.அப்துல் பாசித், மருத்துவ அணி பொறுப்பாளா்- எஸ். சைத் இப்ராஹீம். ஆதம் நகா் ஜமாத்தாா்கள், இளைஞா்கள் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com