வியாபாரி மீது தாக்குதல்

ஒரத்தநாட்டை அடுத்த மேல வன்னிப்பட்டை சோ்ந்த ரங்கராஜ் மகன் ரஞ்சித் குமாா் (35). இவா் ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறாா்.

ஒரத்தநாடு: ஒரத்தநாட்டை அடுத்த மேல வன்னிப்பட்டை சோ்ந்த ரங்கராஜ் மகன் ரஞ்சித் குமாா் (35). இவா் ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறாா்.

இவருக்கும் கண்ணந்தங்குடியை சோ்ந்த கருணாநிதி என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை  இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

 அப்போது ஆத்திரமடைந்த கருணாநிதி, பீா் பாட்டிலால் ரஞ்சித்குமாரை  குத்தியதாக கூறப்படுகிறது. இதையறிந்த அப்பகுதியினா், ரஞ்சித்குமாரை மீட்டு தஞ்சையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com