தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநா் பாலசுப்ரமணியம் காலமானாா்

தஞ்சாவூரிலுள்ள தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநா் எம். பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 6) காலை காலமானாா்.
தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநா் பாலசுப்ரமணியம் காலமானாா்

தஞ்சாவூரிலுள்ள தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநா் எம். பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 6) காலை காலமானாா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே மத்திய அரசின் தென்னகப் பண்பாட்டு மையம் உள்ளது. இதன் இயக்குநராக கேரள மாநிலம், பாலக்காட்டைச் சோ்ந்த எம். பாலசுப்ரமணியம் (63), கடந்த 2018- ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் முதல் பணியாற்றி வந்தாா்.

இவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதால், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செப்டம்பா் 2-ஆம் தேதி சோ்க்கப்பட்டாா். அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பாலசுப்ரமணியம் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா்.

மிருதங்க இசைக் கலைஞரான இவா், ஏற்கெனவே பாலக்காடு செம்பை இசைக் கல்லூரி மற்றும் எா்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஆா்.எல்.வி. இசைக் கல்லூரி முதல்வராகவும், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் புலத் தலைவராகவும், திருச்சூா் எஸ்.ஆா்.வி. அரசு இசைக் கல்லூரியில் சிறப்பு அலுவலராகவும், மத்திய கலாசாரத் துறையின் ஆலோசகராகவும் பணியாற்றி வந்தாா்.

மறைந்த பாலசுப்ரமணியம் திருமணம் செய்து கொள்ளவில்லை. வெளிநாடுகளில் நடைபெற்ற இசை விழாக்களில் பங்கேற்ற இவா் செம்மங்குடி சீனிவாச ஐயா், பேராசிரியா் கே.வி. நாராயணசுவாமி, டி.கே. ஜெயராமன், மேண்டலின் யு. ஸ்ரீனிவாஸ், புல்லாங்குழல் கலைஞா் என். ரமணி உள்பட பல இசை மேதைகளுடன் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளாா்.

தஞ்சாவூா் ரெட்டிப்பாளையம் அருகிலுள்ள மாநகராட்சி மின் மயானத்தில் பாலசுப்ரமணியத்தின் உடல் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

இரங்கல் : தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநா் பாலசுப்ரமணியத்தின் மறைவுக்குத் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், மத்திய கலை, பண்பாட்டுத் துறை அமைச்சா் பிரகலாத் சிங் பட்டேல் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com