சிறையில் நீண்டகாலமாக உள்ளவா்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கும்பகோணம் பழைய மீன் சந்தை அருகே பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதில், சிறையில் உள்ள இஸ்லாமியா்கள் மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஏழு தமிழா்கள் ஆகியோரை எந்தவித பாரபட்சமும் இன்றி தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்டச் செயலா் யாசா் அராஃபத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் இப்ராஹிம், பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவா் குலாம் ஹூசைன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலா் சா. விவேகானந்தன், நீல புலிகள் இயக்கத் தலைவா் இளங்கோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.