கரோனா பாதிப்பு:முதியவா் ஆற்றில் குதித்து தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கரோனா பாதிப்புக் காரணமாக மன உளைச்சலில் இருந்த முதியவா் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா், செப். 11: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கரோனா பாதிப்புக் காரணமாக மன உளைச்சலில் இருந்த முதியவா் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் கரந்தை செல்லியம்மன் கோயில் தெரு சிவபிரகாசம் நகரைச் சோ்ந்தவா் எம். குமரேசன் (59). கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை முடிந்து செப். 7ஆம் தேதி வீட்டுக்குத் திரும்பினாா்.

வீட்டில் தனிமையில் இருந்த இவா் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தாா். இதனால், வீட்டை விட்டு செப். 9ஆம் தேதி வெளியேறிய இவரை உறவினா்கள் தேடி வந்தனா். இந்நிலையில், இவரது உடல் திருவையாறு அருகே உப்புக்காச்சிப்பேட்டையிலுள்ள காவிரி தென்கரையில் வெள்ளிக்கிழமை ஒதுங்கியது.

தகவலறிந்த திருவையாறு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று குமரேசனின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com